பாக்கெட் சாராயம் விற்கும் 12 வயது சிறுவன்! குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார்! அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்!!

பாக்கெட் சாராயம் விற்கும் 12 வயது சிறுவன்! குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார்! அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்!!

ம.பா.கெஜராஜ்,

   கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவனை கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபடுத்தியிருக்கும் விவகாரத்தை மாநில குழந்தைகள் நல ஆணையத்துக்கும், மாநில மனித உரிமைகள் கழகத்துக்கும் புகார் தெரிவிக்க உள்ளனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

  முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் மேற்படி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

 அமைச்சர்கள் பொன்முடியும், மஸ்தானும் நேரில் சென்று மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பினர். 

 அப்படியிருக்க,  கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

   அதில், கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்,

அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சேகர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் இணைந்து சுமார் 30 ஆண்டு காலமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்து வருகிறார்கள்.

இவர்களுடைய மகன் திருநாவுக்கரசும் மற்றும் திருநாவுக்கரசின் மகனான ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

 இதுகுறித்து ஊர் நாட்டாண்மை உட்பட அனைத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

 இது குறித்து காவல்துறைக்கு இரகசிய தகவல் கொடுத்தால் புகார் தெரிவித்த நபரின் தொலைபேசி எணகள் முதலான தகவல்கள் காவல்துறையிடமிருந்து திருநாவுக்கரசின் கள்ளச்சாராய கும்பலுக்கு சென்றடைகிறது. இதனால் பல இன்னல்கள் ஏற்படுகிறது.

  ஆகவே இது குறித்து குழந்தைகள் நல ஆணையம் மற்றும் தமிழ் நாடு மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகார்கள் அனுப்பப்படுகிறது.