கிராம நிர்வாக அலுவலர்கள் வம்பு!

கு.அசோக்,
சோளிங்கர் வட்டாட்ச்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சானு தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பிற துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர் மீது திணிக்கக்கூடாது என்றும், வேளாண்துறை பணியான திருத்தல் கிராப் சர்வே பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் மீது திணிக்கும் வருவாய் நிர்வாகம் கண்டிப்பதாகவும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பிற மாநிலங்களைப் போல கிராப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும்.8.01.24 ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்று வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.