தமிழகத்திலேயே இ-அலுவலக சேவையில் வேலூர் டிஐஜி அலுவலகம் சிறப்பு-டிஜிபி பாராட்டு:-

தமிழகத்திலேயே இ-அலுவலக சேவையில் வேலூர் டிஐஜி அலுவலகம் சிறப்பு-டிஜிபி பாராட்டு:-

ம.பா.கெஜராஜ்,

சிறப்புக்கான பாராட்டு!

தமிழக அரசு துறையில் கடந்த 2018 - ம் ஆண்டு முதல் , பயன்படுத்தப்படும் அரசு ஆவணங்களை ஆன்லைன் மூலம் உயர் பாதுகாப்பான முறையில் அனுப்பவும் , காகித பயன்பாட்டை குறைக்கவும் கோப்புகளை எந்த தேக்கமும் இன்றி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் , தகவல் தொடர்புகளை மின்னணுமயமாக்கவும்  இ.அலுவலகம் அமல்படுத்தப்பட்டது.

  இதனை தொடர்ந்து காவல்துறையில் அமல்படுத்துவதில் 2022 - ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான தமிழ்நாட்டின் சிறந்த செயல்திறன் கொண்ட காவல் சரகமாக வேலூர் காவல் சரக அலுவலகம் தேர்தெடுக்கப்பட்டு காவல்துறை இயக்குநர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து,  வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் முனைவர்.ஜ.ஆனி.விஜயா , இ.கா.ப. , அவர்கள் வேலூர் சரக அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வெகுவாக பாராட்டினா£.¢

  மாணவிகளுக்கு அறிவுரை சொன்ன டிஐஜி:-

வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் முனைவர் . ஐ. ஆனி விஜயா, இ.கா.ப. அவர்கள் வேலூர் மாவட்டம் , தொரப்பாடி அரசினர் உயர்நிலை பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி பெண்கள் விழிப்புணர்வு குறித்துபேசினார்.

  பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை, அது முழு சமுதாய முன்னேற்றத்தை மேம்படுத்தும் எனவும், எந்த சூழ்நிலையிலும் பெண்கள் கல்வியை கைவிடாமல் தொடர வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

  மாணவியர்களின் எதிர் கால வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளை அடைய உத்வேகம் ஊட்டும் வகையிலான அறிவுரைகளை பலவற்றை வழங்கினார்.

  மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் , வேலூர் அனைத்து மகளில் காவல்நிலையம் , பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

 நன்றி:-ஆய்வாளர்,வேலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு.