முதலமைச்சருக்கு நன்றி பாராட்டிய தென் மாவட்டங்களின் ஜல்லிகட்டு சங்கத்தினர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தமிழர்தம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு.
அதனையொட்டி தென் மாவட்டங்களின் ஜல்லிகட்டு சங்கத்தினர் முதலமைச்சருக்கு நேரில் நன்றி சொன்னார்கள்.
அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டித் தலைவர் திரு. தா.ரகுபதி, பாலமேடு மடத்து கமிட்டி ஜல்லிக்கட்டு தலைவர் திரு. கி.பிரபு, திரு. எம்.ஆர்.எம்.பாலசுப்ரமணியம், ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் திரு. பி.ராஜசேகர், வாடிப்பட்டி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு கழகத் தலைவர் திரு. பிரபுபால் பாண்டி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் திரு. கண்ணன், அழகாபுரி ஆ.புதுப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவர் திரு. பரந்தாமன், மதுரை மேலூர் தாலுகா சருகுவலையப்பட்டி கிராம விழாக் குழு நிர்வாகிகள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைகளின் நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.