வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுபேரன் மற்றும் எள்ளுபேத்தி!

வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுபேரன் மற்றும் எள்ளுபேத்தி!

க.பாலகுரு,

திருவாரூரில் கலை இலக்கிய இரவு மேடையில் சர்வதேச திரைப்பட விழா லோகோ வெளியிடப்பட்டது. அப்பொழுது வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுபேரன் மற்றும் எள்ளுபேத்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி "2024 கலை இலக்கிய இரவு திருவாரூர் கிளை சார்பாக கீழ விதியில் விடிய விடிய நடைபெற்றது.

  திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திரு.வி,க  சிலையில் இருந்து புறப்பட்ட கலை இலக்கிய பேரணியை திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா தலைமையில் ஒன்றிய பெருந்தலைவர் ஏ.தேவா துவக்கி வைத்தார். மாவட்டதலைவர் மு.சௌந்தரராஜன், செயலாளர் ஜீ.வெங்கடேசன்,பொருளாளர் செல்வராஜ்,திருவாரூர் கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்,கிளை பொருளாளர் நா.அசோக் குமார் நன்றி கூறினார்.

 நிகழ்ச்சிக்கு திருவாரூர் கிளை தலைவர் சு.ஜெயராமன் தலைமை வகித்தார்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும்,திரைப்படக் கலைஞருமான  ரோகிணி  கலந்துகொண்டு "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற  தலைப்பிலும், திரைப்பட இயக்குனர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் "நீர் மேல் எழுத்து என்ற தலைப்பிலும் மாநிலத் துணை பொதுச்செயலாளர் கவிஞர் களப்பிரன்,மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்கள்.

  முன்னதாக திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தைலம்மை திரையரங்கில் "சர்வதேச திரைப்படவிழா " செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை  நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா லோகோ வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுபேரன் நெல்லையப்பர் மற்றும் எள்ளுபேத்தி  திருவாரூரில் வசிப்பதை அறிந்து அவர்களை மேடையில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டமைத்து வழிநடத்திய மூத்த தோழர்களுக்கு விழா நிகழ்வில் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து கவிஞர் வல்லம் தாஜ்பால்,இளம் கவிஞர்கள் வரத.வசந்தராஜன்,தமிழ்பிரியா கவிதை வாசித்தனர்,புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர்  மகாலிங்கம்,பக்கிரிதாஸ் , வானம்பாடி மற்றும் கங்கை கருங்குயில் கலைக்குழுவினர், கங்கை கருங்குயில் குழுவினர் பறை இசை ஆட்டம், பழவனக்குடிகுடி நண்பர்கள் கோலாட்டம் என நடைபெற்றது. நிறைவாக புதுகை பூபாளம் கலைக்குழு சார்பாக அரசியல் நையாண்டி தர்பார்  உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது.