ஆட்சியரின் ஆய்வோ ஆய்வோ!

ஜி.கே.சேகரன்,
ஏலகிரி மலை பகுதியில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணி மற்றும் நியாயவிலைக் கடை இ-சேவை மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஏலகிரிமலை ஊராட்சியில் ரூபாய் 4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஏலகிரிமலை ஊராட்சி, அத்தனாவூர் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் ஏலகிரி மலை வாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து இறுதியாக ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்கள். உடன் மருத்துவ அலுவலர் மரு.சுனித்தா, அப்போது செவிலியர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.