ஹார்ன் அடித்தவரை கொன்ற மூன்று இளைஞர்கள்!

ஹார்ன் அடித்தவரை கொன்ற மூன்று இளைஞர்கள்!

ஜி.கே.சேகரன்!

இருசக்கர வாகனத்தின் ஒலிபெருக்கி எழுப்பிய தகராறில் முதியவரை அடித்து கொன்ற மூன்று இளைஞர்கள் மேல்  வழக்குகள் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.

 வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55) என்பவர் சிவராத்திரி திருவிழாவை கொண்டாடுவதற்காக மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பில்டர் பெட் சாலையில் எக்ஸ் எல் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

  அப்போது அவருக்கு முன்பு டியோ இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சென்றுள்ளார்கள் அப்பொழுது பின்னே வந்த வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கியை அடித்துள்ளார்.

  அதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்கள் வெங்கடேசனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது, பதிலுக்கு வெங்கடேசனும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

  இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் மூன்று இளைஞர்களும் வெங்கடேசனை தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார்.

 உடனே அந்த மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

   இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  அதன் பின் தப்பி ஓடிய 3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மக்கான் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (20), தோட்டப்பாளைத்தை சேர்ந்த அஜய் (26), ஜவகர் (26) என்பது தெரியவந்தது.

 பின்னர்  கொலை வழக்கு, மற்றும் ஆபாச வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.