வாணியம்பாடி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி டீல்இம்தியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!

இர்ஃபான் முகமது,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் கடந்த 15ம் தேதி சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது அவரை நீதிபதி ராஜேஷ் கண்ணா 7 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து டீல் இம்தியாஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறைச்சாலையில் அடைத்து இருந்த நிலையில், இன்று வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர் படுத்தினர்.
போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிமன்ற நடுவர் அவரை வரும் 5.10.2021ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.