சிறுத்தையை தேடுகிறார்கள் தேடுவார்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள்!

ஜி.கே.சேகரன்,
குடியாத்தம் அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் ஒரு வான்கோழி,நாய் குட்டிகள்,உயிரிழப்பு ,வனத்துரையினர் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார்மலை பகுதியில் ஏழுமலை என்பவர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் ஆடு மாடு கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார்.
இரவு ஆடு பட்டியிலிருந்து இருந்து ஆடுகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது .உடனடியாக சென்று பார்த்த போது சிறுத்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலித்துள்ளனர்.
அங்கிருந்து ஒரு ஆட்டை சிறுத்தை இழுத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.3 ஆட்டுக்குட்டிகள், வான்கோழி, நாய் குட்டிகளை இதுவரை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது.
குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்னர்.
தொடர்ந்து இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் கேமராக்களை வைத்து கண்காணித்து வந்தாலும் சிறுத்தை தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகவே உள்ளது.
இதுவரை சிறுத்தையினால் ஒரு இளம் பெண் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை பிடிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால்அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள் சிறுத்தையை தாங்களே என்ன செய்து விரட்டலாம் என யோசித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆடு மாடுகளை சிறுத்தை தாக்கி உயிர் இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பிடிச்சுடுவாங்க பிடிச்சுடுவாங்க..?