காட்பாடி அக்சீலியம் கல்லூரியில் சிலி நாட்டு பேராசிரியர்!

ஜி.கே.சேகரன்,
காட்பாடி அக்சிலியம் மகளிர் கல்லூரியில் உயிரி மருத்துவத்தில் வேதியியல் பொருட்களின் பயன்பாடுகள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் உயிரி மருத்துவத்தில் வேதியியல் பொருட்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி தலைமையில் நடைபெற்றது.
இதில் வேதியியல் துறை தலைவர் ரோசிலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சிலி நாட்டை சேர்ந்த பேராசிரியர் முனைவர் புகழேந்திரன்,மங்களூர் எனிபோயா ஆராய்ச்சி மைய பேராசிரியர் சுதாகர் பிரசாத்,சவீதா பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் திலீபன்,மற்றும் வி.ஐடி பல்கலைக்கழக பேராசிரியர் ஆயிஷா நூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது உயிரி மருத்துவத்தில் வேதியியல் பொருட்கள் எவ்வாறு கருவிகளை உருவாக்க மருந்துகளை தயாரிக்க மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகள் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தபடுகிறது என்பதுகுறித்து விளக்கி பேசினார்கள். இக்கருத்தரங்கில் திரளான மாணவிகள் பங்கேற்றனர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளும் சமர்பிக்கப்பட்டது '