ஆம்பூர் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லை!

ஆம்பூர் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லை!

 கு.அசோக்,

ஆம்பூரில், காவல்நிலையங்களில் காவலர்கள் போதிய அளவு இல்லை,காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என கன சுரக்ஷா பார்ட்டி நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் தேசிய கட்சியான கனா சுரக்ஷா பார்ட்டி கட்சியின் அறிமுக விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

   இதில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் காவலர்கள் போதிய அளவில் இல்லையெனவும், மேலும் ஆம்பூரை சுற்றியுள்ள பெரும்பாலான காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படுவதில்லை, தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என சொன்னார்கள்.