அறுந்து விழுந்த வயர்! ஆடி அசைந்து வந்த மின் ஊழியர்கள்!

கு.அசோக்,
காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் மின்சார வயர் அறுந்து சாலையோரம் கிடப்பதால் அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் அதனை சரி செய்ய அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் உள்ள அழகாபுரி நகர் பகுதியில் உள்ள மின் கமபத்தில் உயர் அழுத்த மின்சார வயர் செல்கிறது.
காற்றின் காரணமாகவும் தொடர் மழையாலும் அந்த வயரின் மீது போடப்பட்டிருந்த பிவிசி பைப்பில் தண்ணீர் தேங்கி பளு அதிகமானதுயது.
அப்படியிருக்க காற்றின் காரணமாக அந்த மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. அங்கு மக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்புமில்லை.
மேலும் இந்த மின் ஒயரானது பகல் நேரத்தில் அறுந்திருந்தால் அந்த அமர்ந்து மது குடிப்பவர்களுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும்.
இந்த ஒயர் நள்ளிரவு அறுந்து கிடந்ததை காலை அப்பகுதி மக்கள் பார்த்தனர் உடனடியாக மின்சாரவாரியத்தினர் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அறுந்துகிடக்கும் மின் ஒயரை சரி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தபின்னர் அவர்கள் ஆடிஅசைந்து வந்து அதை சரிபார்த்தனர்.