மீண்டும் அதிபர் ஆகும் டொனால்ட் டிரம்ப்! வாக்கு எண்ணிக்கையில் முந்துகிறார்!

மீண்டும் அதிபர் ஆகும் டொனால்ட் டிரம்ப்! வாக்கு எண்ணிக்கையில் முந்துகிறார்!

ம.பா.கெஜராஜ்,

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 19 மாகாணங்களிலும், கமலா ஹாரிஸ் 3 மாகாணங்களிலும் முன்னிலை இருக்கின்றனர். ட்ரம்ப் இன்டியானா, கென்டக்கி, மேற்கு விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுவிட்டார்.

 இதில் இண்டியானா மாகாணத்தில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், கென்டக்கியில் 8 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், மேற்கு விர்ஜினியாவில் 4 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் இருக்கின்றன. தெற்கு கரோலினா, ஜார்ஜியா, ப்ளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

  கமலா ஹாரிஸ் வெர்மண்ட் மாகாணத்தில் வெற்றி பெற்றுவிட்டார். விர்ஜினியா, நியூ ஹாம்ஸ்ஷைர் உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பெற்ற வாக்குகள் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப் 46,71,232 வாக்குகளும் (54.6 சதவீதம்), கமலா ஹாரிஸ் 38,16,312 வாக்குகளும் (44.6 சதவீதம்) பெற்றிருக்கின்றனர்.

 அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. இவற்றில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்பார் என்பது நினைவுகூற தக்கதாகும்.