25,000 பயனாளிகள் பயன்பெற இலக்கு!சொன்னார் சட்டமன்ற உறுப்பினர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத்திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 8 வது நாளான இன்று இராஜபாளையம் வார்டு 27 சாலியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இச்சிறப்பு முகாமை நமது மக்கள் எஸ்.தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், இம்முகாமை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காப்பீடு திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் தற்போது நடைபெறும் இந்த முகாம்களில் 25,000 பயனாளிகள் பயன்பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள்நடைபெற்று வருகிறது எனக் கூறினார். மேலும் நெசவாளர்கள் ராட்டை நூல் சுற்றுவதையும் பெடல்தறியையும் நேரில் பார்வையிட்டு நெசவாளர்களிடம் கோரிக்கையை கேட்டு அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்நிகழ்வில் திட்டத்தின் மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் சுமதிராமமூர்த்தி, ராமலட்சுமி குருசாமி மாரியப்பன் வார்டு செயலாளர்கள் ராமர் ராஜேந்திரகுமார் காளிமுத்து பழனிகுரு , ஊர்த்தலைவர் மாடசாமி கழக நிர்வாகிகள் நாகேஷ்வரன் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.