சட்டகல்லூரி மாணவர்களின் இரவு போராட்டம்!
ஜெ.அருண் ஹென்றிக்ஸ்
கோவையிலுள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இரவில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மாணவர் ஒருவர் கல்லூரி நிர்வாகத்திடம் நிர்வாக சீர்கேடு தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.
அதை பொறுத்துக் கொள்ள முதல்வர் அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளார். அது மட்டுமின்றி போலிசில் புகார் அளித்து இன்றைக்கு வழக்கு பதியும் அளவுக்கு பிரச்சனையாகியுள்ளது.
கல்லூரி நிர்வாகத்தின் இம்மாதிரியான மாணவர் எதிர்ப்பு நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணாவர்கள் நேற்று இரவு நீண்ட நேரம் குரலெழுப்பி போராட்டம் நடத்தினர்.
போராட்டக்களத்தை கலைக்கும் நோக்கில் முதல்வர் கோபாலகிருஷ்ணன் மாணவர்களை மிரட்டியதல் அங்கு மேலும் பதற்றம் கூடியது.