அதிகாரிகளின் தவறால் அதிமுக பிரமுகர் தில்லுமுல்லு!

அதிகாரிகளின் தவறால் அதிமுக பிரமுகர் தில்லுமுல்லு!

கு.அசோக்,

 சேர்ப்பாடி கிராமத்தில் அதிகாரிகளின் தவறால் விவசாயியின் சொத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கும் அதிமுக பிரமுகர் -  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

வேலூர்மாவட்டம், அனைக்கட்டு அருகேயுள்ள சேர்ப்பாடி பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், இவரது பூர்வீக சொத்தை தவறுதலாக அதிகாரிகள் தயாநிதி என்பவரின் பெயரில் சேர்த்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த தயாநிதி விவசாயி தங்கராஜின் சொத்தை வேறு ஒருவருக்கு விற்றதுடன் தயாநிதியின் அரசியல் செல்வாக்கால் விவசாயியை கொலை செய்துவிடுகிறார். இதனால் விவசாயி தங்கராஜ் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது நிலத்தை அபகரித்துகொண்டு அதனை விற்றும் விட்டு கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக தயாநிதி மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு புகார் மனு அளித்தார்.

   வேலூர் மாவட்டத்தில் கணினியில் ஏற்றும் போது (யூடி.ஆர் ) பட்டாக்களில் அதிகாரிகள் இது போன்று ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றி ஏற்றி விடுவதால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.