மனைவியை கத்தியால் குத்திய கணவன்! ஓடி வந்து காப்பாற்றிய மக்கள்!
ம.பா.கெஜராஜ்,
பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி அந்த பகுதியையே அலறவிட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (30) இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறா£.
இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவரை பெற்றோர் திருமணம் செய்தனர். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வரும் நந்தினி, புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீராம் என்கிற பைனான்ஸில் பணி செய்து செய்து வந்துள்ளார்.
அதை அறிந்த அவரது கணவன் பலமுறை தனது மனைவியை சந்தித்து, வா வீட்டுக்கு போகலாம் என அழைத்தும் நந்தினி போகவில்லை. இதனால் உச்சகட்ட வெறுப்படைந்தார் பிரவீன்,
அப்படியிருக்க, இன்று காலை நந்தினி பணி செய்து வந்த ஸ்ரீராம் பைனான்ஸ்க்கு சென்ற பிரவீன் தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார்.
இம்முறையும் நந்தினி அவருடன் மனைவி செல்ல மறுத்ததால், ஆத்திரமடைந்த பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக நந்தினியை பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் நந்தினி அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியை குத்தியதால் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவர் பிரமை பிடித்தவர் போல் அங்கேயே அமர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்துச் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையி முதல் உதவி அளித்தனர்.
இந்த சம்பவத்துக்கான காரணம் பற்றி போலிசார் விசாரித்து வருகின்றனர்.