வலு தூக்கும் போட்டியாளர்களை மனதார பாரட்டிய ஆட்சியர்!

 கு.அசோக்,

காமன்வெல்த் போட்டியில்  4  தங்கப பதக்கம் மற்றும் உலக சாதனை புரிந்த  குடியாத்தம் வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார் - மாவட்ட ஆட்சியரை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்

  வேலூர் மாவட்டம் குடியாத்தம், நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.

  குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் பாமக முன்னாள் மாவட்ட துணை செயலாளர்  மூர்த்தியின் மகன் ஜெயமாருதி(17). இவர் வேலூர் விஐடியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

  இவர் 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று 4-  தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

  இதையடுத்து நியூசிலாந்து நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 27-இல் தொடங்கி, டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, அங்கு போட்டிகளில்பங்கேற்றார்.

அங்கு நடைபெற்ற போட்டியில் 74-கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253-கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார்.

  பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோதூக்கி மொத்தம் 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

  நியூசிலாந்து நாட்டில் இருந்து தங்கப் பதக்கங்களுடன்  ஜெயமாருதி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியனை சந்தித்து மாணவர் ஜெயமாருதி வாழ்த்து பெற்றார்.

   பின்னர் ஜெயமாருத்திக்கு ஆட்சியர் ரூ.50 ஆயிரம் காசோலையாக ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார். இதேபோன்று காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 6 ஆறாம் இடம் பிடித்த மாணவி கவிதாவும் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.