விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு தேதி நீட்டிப்பு!

விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு தேதி நீட்டிப்பு!

ஆர்.ரமேஷ்,

 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25 ஆக முன்பதிவு  நீட்டிப்பு நாள் 02.09.2024 ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  தமிழ்நாடு விளையாட்டுப் மேம்பாட்டு ஆணையத்தில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் உள்ளன.

 ஆக, 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில  அளவிலான "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை"  விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர்  மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

  இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம்  வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து  பதிவேற்றம் செய்திட வேண்டும்.

  மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

  குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

  மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக  நான்காம் இடம் பெற்றவர்க்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.

  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியால் இவ்வாண்டுக்கான தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்  கல்வி  மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள்  நடத்தப்பட உள்ளது.

  போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 என அறிவிக்கப்பட்ட நிலையில் விளையாட்டு வீர்ர்இ வீராங்கனைகள் அதிகளவில் பங்கேற்றிடும் பொருட்டு இணையத்தில் பதிவு நாள் நீட்டிக்கப்பட்டு 02.09.2024 வரை பதிவு செய்து கொள்ளலாம் .

   எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல்  https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  தாங்களாகவோ,  தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு  தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையத்தின், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். "ஆடுகளம்" தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி  மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்குபெறுமாறு  மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.