பயிற்சி செவிலியரை சில்மிஷம் செய்த அரசு டாக்டர் மீது வழக்கு! தப்பிக்க வைத்ததா போலிஸ்!!

பயிற்சி செவிலியரை சில்மிஷம் செய்த அரசு டாக்டர் மீது வழக்கு! தப்பிக்க வைத்ததா போலிஸ்!!

 கு.அசோக்,

 கேரள நடிகைகள் அட்ஜெஸ்மென்ட் விவகார பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது. இந்நிலையில் செவிலியர் பயிற்சி மாணாவியை அரசு டாக்டர் சில்மிஷம் செய்து வழக்கில் சிக்கியிருக்கிறார்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

 அந்த மாணவி  குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்படியிருக்க குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருபவர் எஸ்.பாபு.

  அரசு மருத்துவரான¢ பாபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

  அதிர்ச்சடைந்த அந்த மாணவி கூச்சலிட்டவரே அறையில் இருந்து வெளியேறிவிட்டார்.

  இது குறித்து அங்கு பணியாற்றிய வரும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளுக்கும், தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

 பின்னர் அந்த மாணவியின் பெற்றோர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில்  மருத்துவர் பாபு மீது புகார் அளித்தனர்.

   மாணவியின் புகாரைத் தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி,  குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையை தொடர்ந்து குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாபு மீது நான்கு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில் மருத்துவர் பாபுவைவை சில போலீசார் நைசாக எஸ்கேப் செய்ய வைத்தனர் என்று கூறப்படுகிறது.   அதே நேரத்தில் தலைமறைவான அரசு மருத்துவர் பாபுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும் செவிலியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.