வாங்கம்மா வாங்க... வாங்க சார், வாங்க என்று வாக்காளரை அழைக்கும் தேர்தல் ஆணையம்!

ம.பா.கெஜராஜ்,
வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருப்பதால் இன்று வாக்குபதிவின் சதவிகிதம் கூடும் என்று நம்பப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேப்ரலி தொகுதிக்குட்பட்ட 49 தொகுதிகளில் தேர்தல் நடப்பதால் களம் பரபரப்பாக தெரிகிறது
543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவானது தொடங்கியிருக்கிறது. இதில் ராகுல் காந்தி மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதிராணி, பியூஸ் கோயல் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், உள்ளிட்ட நடசத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
ஏற்கனவே நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலில் 379 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 49 தொகுதிகளுடன் சேர்த்து 428 தொகுதிகளில் வாக்கு பதிவானது நிறைவடைகிறது.
அதே போல் ஒடிசாவின் 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது.
மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 3 மக்களவை தொகுதிக்கான தேர்தலுடன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் காண்டே சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.
5-ம் கட்ட தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
நகரங்களை சேர்ந்த மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சில தொகுதிகளில் மட்டும்நேரம் மாறுபடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 4 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், 2ஆம் கட்டமாக இன்று 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் ஹின்ஜிலி, கன்டபன்ஜி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாத வட மாநில மக்கள் வாக்குசாவடிக்கு வரவில்லை. அதை மனதில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அநேகமாக இன்று மாலை எக்சிட் போல் வாயிலாக மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது 75 சதவிகிதம் தெரிந்துவிடும்.