டேக்வாண்டோ போட்டி தொடக்க விழா!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி தொடக்க விழா இராஜபாளையம் மறக்கண்ணு செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் நமது மக்கள் எம் .எல் .ஏ. எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளக்க வேண்டுமென அனைத்து தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு தற்போது அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.
இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட டேக்வாண்டோ அசோசேசன் தலைவர் முரளிதரன் செயலர் கணேசன் மாஸ்டர் செல்வமணி செட்டியார்பட்டி பேரூர் துணை சேர்மன் விநாயகமூர்த்தி நகர துணை செயலாளர் இக்சாஸ் இப்ராஹிம்
மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.