மாசு ஏற்படுத்தும் ஜல்லி தொழிற்சாலை! மூட கோரிக்கை மனு!!

கு.அசோக்,
காட்பாடி அருகே, 66 புத்தூர் கிராமத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி சுற்றுசூழலை மாசுப்படுத்தும் ஜல்லி தொழிற்சாலையை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் - பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் அளிக்க கோரி இந்திய குடியரசு கட்சி (சிவராஜ் பிரிவினர் ) மனு அளித்தனர்
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே 66 புத்தூர் கிராமத்தில் அல்ட் ரா கான்கிரீட் என்ற தனியார் ஜல்லி கற்கள் உடைக்கும் கான் கிரீட் தொழிற்சாலை மாசுக்கட்டு பாட்டு வாரிய அனுமதியில்லாமல் இயங்குகிறது.
இதனால் மாசு ஏற்படுகிறது, அருகிலுள்ள சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விவசாயமும் பாதிக்கபடுகிறது, சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு, காற்றும் மாசடைகிறது.
எனவே தனியார் ஜல்லி கற்கள் உடைக்கும் தொழிற்சாலையை மூட கோரி கிராம மக்கள் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியிடம் மனு அளித்தனர்
இதே போன்று காட்பாடி சேனூர் கிராமத்தில் முத்தமிழ் நகர் பகுதியில் ஐந்து ஏக்கர் பஞ்சமி நிலங்களை தனி நபர்கள் வீட்டுமனையாக விற்பனை செய்வதாகவும் இதனை தடுத்து நிறுத்த கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய குடியரசு கட்சி (சிவராஜ் பிரிவு )மாநில பொதுசெயலாளர் ஆறுமுகம் தலைமையில் பஞ்சமி நிலங்களை மீட்க கோரியும் பஞ்சமி நில விற்பனையை தடுக்க கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.