முழு நேர அரசு ஊழியர்களாக்க போராட்டம்!

முழு நேர அரசு ஊழியர்களாக்க போராட்டம்!

கு.அசோக்,

இராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும், அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தினர்.

 இராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.

  பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒன்று கூடிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக முழக்கமிட்டனர்.

  சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும், அகவிலைப்படியை உடனடியாக  வழங்கிட வேண்டும் பணிக்கெடை ரூ, 5 லட்சம் வழங்கிட வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என ஆர்பாட்டம் செய்தனர்.