முகாம் வீடுகளை பார்வையிட்ட ஆட்சியர்!

முகாம் வீடுகளை பார்வையிட்ட ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,

  மேல்மொனவூரில் இலங்கை தமிழர்களுக்காக 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது அதன் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

 இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என ஆட்சியர் பேட்டி

 வேலூர்மாவட்டம்,மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்காக 220 வீடுகளின்  கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

 இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் வட்டத்தில் மேல்மொனவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டினார்கள் அதற்காக பணிகள் நடக்கிறது.

 55 தொகுப்புகளாக 220 வீடுகள் பொதுமான இடைவெளியில் கட்டப்படுகிறது அதனை தற்போது பார்வையிட வந்துள்ளோம் பணிகள் வரும் பிப்ரவரி மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். வாரம் ஒரு முறை இவை கண்காணிக்கபடும் என்று கூறினார்.