சட்டவிரோத கஸ்டடியை கண்டித்து கலெக்டர் ஆபிஸ் முற்றுகை!

சட்டவிரோத கஸ்டடியை கண்டித்து கலெக்டர் ஆபிஸ் முற்றுகை!

 ஜி.கே.சேகரன்,

  மூதாட்டி கொலை வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் உறவினர்கள் தர்ணா.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா(65) கடந்த திங்கட்கிழமை கொலை செய்யப்பட்டார்.

 காந்தா அவரது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து காந்தாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

 கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயின் மற்றும் 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் நகை தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

   இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

  இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மூன்று வாலிபர்கள் பாண்டியன்(24) ,ரஞ்சித்(23) , விக்னேஷ்(23) ,ஆகியேரை அழைத்துச் சென்று மூன்று நாட்களாக விசாரித்து வந்தனர்.

  போலீசார் மேற்படி மூவரை சட்டத்துக்கு விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி இன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவரது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தர்னாவில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிலையில் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.