அதிகாரிகள் தயவில் கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கு கடத்தபடும் பாறை கற்கள்! கலெக்டரிடம் புகார் அளித்தும் "நோ யூஸ்"!

ம.பா.கெஜராஜ்,
"அதிகரித்து வரும் கனிமவள கொள்ளைக்கு, அதிகாரிகள் தான் காரணம், " என, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் யுவராஜ் பேட்டியில் சொன்னார்.
அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு,
தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட 'கிரஷர்' இயந்திரங்கள், அரசு அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இதன் வாயி லாக அரைக்கப்படும் கனிமங்கள், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநி லங்களுக்கு, நாள்தோறும் டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்திலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான்,அதிக அளவு குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இங்குள்ள மலைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டு, கிடைக்கும் ஜல்லி கற்கள், 'எம் சாண்ட்' உள்ளிட்ட கனிமங்கள், நாள்தோறும் ஒரு லட்சம் டன் வீதம், கர்நாடகாவுக்கு லாரிகள் வாயிலாக கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் கனி மங்கள் இரவும், பகலும் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் கனிம வள கொள்ளை குறித்து, கலெக்டரிடம் கூறியும், அவர் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
அங்கு இயங்கும், 38 கிரஷர் இயந்திரங்கள் வாயிலாக, தரமற்ற எம் -சாண்ட் தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விற்கப் படுகிறது.
எனவே, அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கனிமவள கொள்ளைக்கு, அதிகாரிள் தான் காரணம்.
கனிமவள கொள்ளை குறித்து, 2020ல் இருந்தே, தொடர் மனு கொடுத்து வருகிறோம். இதில் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கனிமவள பொருட்களை ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை, 'கொள்ளையில் ஈடுபடுவோர்' என, சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. கனிமவள கொள்ளை குறித்து, அரசுக்கு புகார் தெரிவிக்க, 10 மாவட்டங் களில், 'லோக் ஆயுக்தா' 3 அமைப்பை, அரசு செயல் படுத்த வேண்டும் என்று சொன்னார்.