வாக்களிப்பதை ஊக்குவிக்க செல்பி பாயிண்ட்! பழைய பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பினால்  ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவஸ்தை!

வாக்களிப்பதை ஊக்குவிக்க செல்பி பாயிண்ட்! பழைய பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பினால்  ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவஸ்தை!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி மற்றும்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
       வேலூர்மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது உறுதிமொழி ஏற்பு ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது.

 அதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர்.

 இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

 பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததை ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது.
 
   இதே  அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்பி பாய்ண்ட் வைக்கப்பட்டிருக்கிறது. 

 ஆட்சியர் அதில் நின்று  படம் போட்டோ எடுத்துக் கொண்டார்.

அரசு அதிகாரிகளும் ஆர்வமுடன்  செல்பி பாய்ண்ட்டில் நின்று படம் எடுத்தனர்.

குறிப்பு:-பழைய பேருந்து நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில் அந்தப் பேருந்து நிலைய நடைமேடை மற்றும் உட்புறம் அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அரசு அதிகாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

இதுகுறித்து விசாரித்த போது மாநகராட்சியில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மாமூல் வாங்கிக்கொண்டு இந்த கடைகளை சட்டத்துக்கு புறம்பாக வாடகை விட்டுள்ளனர் என்று கூறினர்.