எஸ்.பி.ஸிடிரிக்ட்:- உளவுத்துறை எஸ்.ஐ. கரெப்ஷன்! சென்னைக்கு தூக்கியடிக்கப்பட்டார்!

டி.முகமது இர்பான்,
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் எஸ்.பி.ஸிடிரிக்ட்டாக உள்ள சூழலில், உளவுத்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. சாராயம் காய்ச்ச துணை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது, ஆக அவர் சென்னைக்கு தூக்கியடிக்கப்பட்டார்!
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பதவியேற்ற பின்னர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், செயற்கை மணல் மற்றும் இல்லீகல் பிசினஸ் எதுவும் நடப்பதில்லை. அந்த அளவுக்கு மிகவும் ஸ்டிரிக்டாக செயல்பட்டு வருகிறார். இவரை மக்கள் வாழ்த்தும் அதே நேரத்தில் லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் சில இன்ஸ்பெக்டர்கள் வருமானம் போச்சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக புதியதாக பொறுப்பேற்ற உள்ளூர் கலால் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்ணீர்விட்டு வருகிறாராம்.
இந்நிலையில், சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்டது தொடர்பாக உளவுத்துறை எஸ்.ஐ. ஒருவர் உயரதிகாரிகளிடம் சிக்கி நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். தற்போது அவர் தலைமை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உளவுத்துறையை (டிடாச்மென்ட்) சேர்ந்த எஸ்.ஐ.ரங்கநாதன் என்பவர் தனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். 4 அல்லது 5 நாளைக்கு ஒரு முறை மொத்தமாக கொடுத்துடு, யார் பிடிச்சாலும் என் பெயரை சொல்லக் கூடாது என்று சாராய பேரம் பேசியிருந்தார்.
இந்த மேட்டர் வெளியில் கசிந்தது, இந்நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அவரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள உளவுத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்படியிருக்க எஸ்.ஐ.ரங்கநாதன் சென்னையில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
எஸ்.பி.கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்ட நிலையில், மேற்படி ரங்கநாதன் சாராயம் விற்க ஊக்குவிக்கும் வகையில் மாமுல் கேட்ட மேட்டர் போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை ஏன்னா....?