எஸ்.ஐ.வீட்டிலேயே கொள்ளை!

எஸ்.ஐ.வீட்டிலேயே கொள்ளை!

கு.அசோக்

 சோளிங்கர் அருகே கூடலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்கநகைகள் அரைகிலோ வெள்ளி ரூ,20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை - சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டிலும் பூட்டை உடைத்து கொள்ளை

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குப்புராஜ்  என்பவரின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பிரோவை உடைத்து 10 சவரன் தங்க நகை,அரை கிலோ வெள்ளி ,20, 000 ரொக்க பணம் திருடி சென்றுள்ளனர்.

 தொடர்து அருகே இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் என்பவரின் வீட்டை பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் திருடிச்சென்றுள்ளனர்.

   சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் எவ்வளவு பணம் நகை என தெரியவில்லை  இது குறித்து தகவல் அறிந்த கொண்ட பாளையம் காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி வருகிறார். காவல் துறையை சேர்ந்தவர் வீட்டிலேயே நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.