தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற எஸ்.ஐ.!

க.முகிலேஷ்வரன்,
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக, இந்திய தேசியக்கொடியுடன் வந்த ரசிகர்களிடம் இருந்து கொடிகளை பறித்த போலீஸ் எஸ்ஐ, அதனை குப்பைத் தொட்டியில் போட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ரசிகர்களிடம் இருந்து இந்திய தேசியக் கொடியை பறித்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், அவற்றை குப்பைத் தொட்டியில் போட முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி செல்லும் போது, அங்கிருந்த இந்திய ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டனர். இது இந்தியா மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் நேற்றைய போட்டியை காணவந்த ரசிகளிடமிருந்த் உ தேசிய கொடியை பறித்து அந்த எஸ் .ஐ இப்படி செய்திருக்கிறார்.
இதற்காக அவரை ஆயுதப்படைக்கு அவரை மாற்றி கடும் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.