எஸ்.ஆர்.எம். மருத்துவமனை:- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம்!

பா.சுரேஷ்,
கட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை யில் மருத்துவ பரிசோதனைமற்றும் ஆராய்ச்சி மையம்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் இணை வேந்தர் பி.சத்தியநாராயணன் தகவல்.!
செங்கல்பட்டு மாவட்டம் கட்டாங்குளத்தூரில் இயங்கிவரும் எஸ்ஆர்எம்மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையதிற்குஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் (கல்வி) முனைவர் பி.சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 30- க்கும் மேற்பட்ட சிறப்பு மற்றும் முதன்மையான மருத்துவமையங்கள் அங்கீகாரம் பெற எதிர்பார்த்த நிலையில் அங்கீகாரம் கிடைத்தஒரே மையமாக எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விளங்குவதுமகிழ்ச்சிக்குறியது. நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிறப்புபெற்ற இம் மருத்துவமனைக்கு, மேலும் தரமான சிகிச்சை அளிப்பதற்குதேவையான ஆராய்ச்சிகள் மேற்தொள்ள வாய்ப்புஎன்று இணை வேந்தர்(கல்வி) முனைவர் பி.சத்தியநாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.