ஒரே நாளில் 6 குழந்தைகள் மீட்பு! செல்போன் ஒப்படைப்பு நிகழ்வில் எஸ்.பி.தகவல்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் களவு போன 250 செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார் - கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காவல்துறை சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதானவைகளை சரி செய்ய தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 1. 74 கோடி மதிப்புள்ள 922 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அதில், ஏற்கனவே களவு மற்றும் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், சி டிராக்கர் மூலமும் மற்றும் சியர் போர்டல் மூலமும் 250 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளின் மதிப்பு ரூ.50.20 லட்சம் மதிப்பு என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் இதுவரை ஓராண்டில் ரூ.1.74 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், செல் டிராக்கர் மூலம் 130 செல்போன்களும் சி.இ.ஐஆர் மூலம் 120மென மொத்தம் செல்போனும் 250 செல் போன்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரையில் இந்த ஆண்டு ரூ.1. 74 கோடி மதிப்பிலான செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது செல்போன் களவு போனால் சி டிராக்கர் மூலம் லாக் செய்யலாம் இது சி.இ.ஐ ஆர் போர்டலிலும் செய்ய முடியும். காணாமல் போன செல் போனை ஆப் செய்து வைத்திருந்து அதில் வேறு சிம் கார்டு போடுவதற்கு முயன்றாலே இந்த சி.இ.ஐ ஆர் போர்டலில் கண்டுபிடித்துவிடலாம்.
கள்ளச்சாராயம் ஒழிக்க விரைந்து ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறை கண்காணிப்பு கேமராக்கள் பழுதானவைகளை சரி செய்ய தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இயங்காத சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்யப்படும். 146 குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 2 வாரங்களில் 53 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளோம். நேற்று 6 குழந்தைகளை கண்டுபிடித்தோம். காட்பாடியில் ஒடிசாவை சேர்ந்த 10 வயது சிறுமி காணாமல் போனதை கண்காணித்து மூன்று நாட்களில் ஒடிசாவில் அந்த சிறுமியை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தோம். அவர் கடத்தப்படவில்லை. பெற்றொருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் பிரிந்து வாழம் தந்தையை காண ஒரிசா சென்ற போது அம்மாநில போலிசார் அவரை மீட்டு ஹோமில் வைத்திருந்தனர். கள்ளச்சாராயம்15 நாட்களில் முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்று சொன்னார்.
செய்தியாளரின் செல்ஃபோன் காணாமல் போனது குறித்து புகார் அளித்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லையே என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிராசஸ் ஆகி கொண்டிருக்கும். உடனடியாக கண்டுபிடித்து தரப்படும் என்று எஸ் பி பதில் கூறினார்.
குறிப்பு:-தேர்தல் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் செல்போன் காணாமல் போனது. இது குறித்து புகார் அளிக்க சென்ற பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த புகாரை பெற மறுத்துள்ளார்.
ஆகவே எஸ்.பி. யிடம் புகார் அளிக்கப் போகிறோம் என்று சொன்ன பின்னரே அதை வாங்கி பதிவு செய்துள்ளார். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இதுவரை அந்த செய்தியாளரின் செல்போனை கண்டுபிடித்து தரவில்லை என்ற குமுறல் செய்தியாளர்கள் வட்டாரத்தில் உள்ளது.