சொன்னபடி கட்டிடத்தை இடித்த பவன்!

வி.டி.வித்யாசாகர்,
நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பவன் கல்யாண் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை நடுரோட்டில் வைப்பேன். உங்களின் விதிமீறல் கட்டுமானங்களை இடிப்பேன் என்று பேசினார்.
இந்நிலையில் அவர் வெற்றி பெற்று துணை முதலமைசராக பதவியேற்ற பின்னர், காக்கிநாடா முன்னாள் எம்.எல்.ஏ. துவரம்புடி சந்திரசேகர் ரெட்டிக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து தள்ள உத்தரவிட்டுள்ளார்.
கட்டுமானத்தில் உள்ள கட்டிடம் விதி மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக புகார் வந்தது என்று அதற்கான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த கட்டிடத்தை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்த போது, அதனை தடுக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ துவாரம்புடி சந்திரசேகர் அவரது ஆதரவாளர்களை போலீசார் இழுத்துச் சென்றனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தவுடன், முன்னாள் முதல்வர்ஜெகன் மோகனின் வீடு உள்ள தாடேபள்ளியின் இரும்பு வேலிகள் அகற்றப்பட்டது நினைவு கூறத்தக்கதாகும்.