சித்திரை திருவிழாவுக்கு அணிவகுக்க பாமக வினர் தீர்மானம்!

ஜி.கே.சேகரன்,
மே11 மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது என கேவிக்குப்பம் பாமக மாவட்ட பொதுகுழுவில் தீர்மானம்
வேலூர்மாவட்டம், கே.வி குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவா வெங்கடேசன்,மாநில மாணவர் சங்க செயலாளர் கோபிநாத், வேலூர் ஒருங்கிணைந்த பாட்டாளி இளைஞர் அணி செயலாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கட்சியினுடைய முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மே 11 நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு வேலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது எனவும், கிராம தோறும் சுவர் விளம்பரங்கள் அதிக படுத்துவது கிராமக் கூட்டங்கள் நடத்தி மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.