இரயில்வே ஊழியரின் அடாவடி! திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்!

ம.பா.கெஜராஜ்,
இரயில்வே ஊழியர் மனோகரன் என்பவர் என் வீட்டை அபகரித்துக் கொண்டு தொல்லை கொடுத்துவருகிறார். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து என் கஷ்ட நிலையை போக்க உதவிடுங்கள் என செல்வி என்கிற பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிடம், செல்வி அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது.
நான் திருப்பத்தூர் மாவட்டம், சின்னபொன்னேரி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். அவர் ஏலகிரி மலை முத்தானூர் கிராமத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டுக்கு என் கணவர் உயிருடன் இருந்த போதும் சரி, தற்போதும் சரி எங்களால் போக முடியவில்லை. அங்கு வசிக்கும் இரயில்வே ஊழியர் மனோகரன் என்பவரே அதற்கு காரணம்.
தற்போது மேற்படி வீட்டை விற்று, என் கணவர் பெற்ற கடன்களை அடைக்க வேண்டியுள்ளது. கணவரை இழந்த நான் என் குடும்ப செலவிற்காக தற்போது நான் ஷீ கம்பெனியில் வேலை செய்கிறேன். என் கணவர் இறந்த பிறகு கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து என்னிடம் உங்கள் கணவர் எங்களிடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
என் பையனுக்கு திருமணம் செய்யவேண்டும். ஆகையால் என்னுடைய வீட்டினை விற்பனை செய்து, கடன்களையும் தீர்த்து, என் பையனின் கல்யாணத்தையும் செய்து விடுவேன்.
நான் வீட்டினை விற்பதற்காக ஏலகிரிமலை முத்தனூர் கிராமம் சென்றேன், அப்போது ரயில்வேயில் பணிபுரியும் மனோகரன் என் கணவர் கட்டிய வீட்டினை அபகரித்துக்கொண்டு வீட்டினை விற்பனை செய்வதை தடுத்துவருகிறார். மனோகரனுக்கும் அந்த வீட்டுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எங்கள் சொத்து தான் என்பதற்கான பத்திர நகலையும், பேப்பர் விளம்பரத்தினையும் தங்களின் மேலான பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன் ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து உதவுங்கள் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரித்த வகையில் இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர், அவருக்கு சில ஆதரவாளர்களை உடன் வைத்துக் கொண்டு பட்டா நிலங்களை அபகரித்து வைத்திருப்பதாகவும், பஹீம், சின்னராஜ் என்பவர்களின் நிலம் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்து அதில் மாடுகளை கட்டி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இது போன்ற அடாவடி தனத்துக்குகாக நிலத்தின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவினை பெற்று வந்த போதிலும், உள்ளூர் வருவாய் அலுவலர்கள் சிலர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறார்களாம்.
அவுங்கெல்லாம் அதிகாரிகளாம். அது சரி!