விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது!

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிணற்றுக்கொள்ளை வட்டம் சொரக்காயல்நத்தம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன் பேரில், சொரக்காயல் நத்தம் பகுதியிற்கு விரைந்த தனிப்படை மற்றும் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட போது முருகன் என்பவர் தனது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  அதனை தொடர்ந்து முருகனை திம்மாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்னர்.