கொலையை சுட்டிக்காட்டி இன்ஸ்ட்ராம்கிராம் பதிவு! கைதான சிறார்கள்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
இன்ஸ்ட்ராகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட இளஞ்சிறார் உட்பட 3 நபர்கள் கைது.
திருநெல்வேலி மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கை மேற்கோள்காட்டி இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டது சம்பந்தமாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் மேற்படி செயலில் ஈடுபட்டது நாங்குநேரி, ஆலப்புதூரை சேர்ந்த சாமி (19), அலங்காரபேரியை சேர்ந்த முத்து (20) மற்றும் ஒரு இளஞ்சிறார் என தெரியவந்தது. உடனடியாக தாலுகா காவல்துறையினர் மேற்படி செயலில் ஈடுபட்ட இரு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும், இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதவிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.