கருணாநிதியின் சொந்த ஊரில் நாணயத்துக்கு நன்றி தீர்மானம்!

கருணாநிதியின் சொந்த ஊரில் நாணயத்துக்கு நன்றி தீர்மானம்!

க.பாலகுரு,

 கருணாநிதிக்கு நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு திருவாரூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணகி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவநேசன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது:-

மணிகண்டன் (அ.தி.மு.க.) :- அலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த ஒன்றியக்குழு தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அலிவலம் பொது மயான சாலையை பழுதடைந்துள்ளதை சீரமைத்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும். வடகரை பள்ளியில் ஆழ்குழாய் சீரமைத்து குடிநீர் தட்டுபாடுன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகரன் (தி.மு.க.) :- எனது பகுதிகளில் உள்ள குளங்களில் உள்ள படித்துறைகள் பழதடைந்த பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீரமைத்து தர வேண்டும்.

முருகேசன் (தி.மு.க.) :- தண்டலை-மேப்பாடி சாலைக்கு சாலைக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விளமல் தெற்கு சாலை, தண்டலையில் அங்கன்வாடி மையம், தியானபுரம் ஆதிதிராவிடர் சாலை, மயான சாலை, கூட்டுறவு நகர் சாலை உள்ளிட்ட சாலைகளை அமைத்து தர வேண்டும். துணைத்தலைவர் :- பழையவலம் தெற்கு தெரு சாலை பாதி பகுதியும்.  மாரியம்மன் கோவில் சாலையையும் சீரமைத்து தர வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்:- திருவாரூர் ஒன்றியத்தில் மக்கள் கோரிக்கைகள் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னின் மைந்தன், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி புகழை நிலை நாட்டும் வகையில் அவருடைய உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு  100 நாணயம் வெளியிட்ட மத்திய, மாநில அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

இதேபோல் தமிழக அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தை கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என கூறினார்.