ஆஃபர் ரேட்:- மூன்று பாக்கெட் சாராயம் ரூ.50!  எஸ்.பிக்கள் இருவர் பணி நீக்கம்!!  

ஆஃபர் ரேட்:- மூன்று பாக்கெட் சாராயம் ரூ.50!  எஸ்.பிக்கள் இருவர் பணி நீக்கம்!!  

ம.பா.கெஜராஜ்,

   மூன்று பாக்கெட் சாராயம் வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் அதனை அதிகம் பேர் வாங்கிக்குடித்துள்ளனர். விஷ சாராயம் என்பதை அறியாமல் வாங்கி குடித்தவர்கள் பலர் இறந்த விவகாரத்தில் 2 எஸ்.பி.க்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு அரசு, டிஐஜி பகலவன் இ.கா.ப.அவர்களையும் மாற்றியிருக்கிறது.

 நிலவரம் இவ்வாறு இருக்க, வேலூர் மாவட்டம், வேலூர், பேர்னாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதியில் சாராய சாம்ராஜ்யம் நடந்து வருவதுடன், போலி மது பாட்டில் விற்பனை நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள பெட்டிக் கடைகளில் கிடைப்பதாக மக்கள் வேதனை கொள்கிறார்கள்.

 வேலூர் நகரில் உள்ள பாபுராவ் தெருவில் மோகன் லாட்ஜில் 24 மணிநேரமும் போலிமதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன.

 இந்த தொழிலை காலம் காலமாக செய்து வரும் அதன் உரிமையாளர் பழைய பேருந்து நிலையம் அருகில் பக்காவாக பார் நடத்துகிறார். அவர்களுக்கு வேலூர் கலால் பிரிவினர் பக்க பலமாக உள்ளார்களாம். மேலும் பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை வியாபாரிகளுக்கு திருட்டுத்தனமாக சப்ளை செய்து வருகிறார்கள்.

 அதே போல், குடியாத்தம், காமாட்சியம்மன் கார்டன், வேலூர் சாலையில் உள்ள நகராட்சி எல்லையில் ஆர்ச் பக்கத்திலும், மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அமனாங்குப்பத்திலும், பிச்சனூர் காளியம்ம்மப்பட்டி, சாமியார் மலை,கள்ளூர் காந்தி நகர், (25 ஆண்டுகளாக அப்பா, பிள்ளை, பேரன் வரை தொழில் செய்கிறார்கள்)  நெல்லூர் பேட்டை ஏரிக்கரை, மேல்பட்டி சிறுவங்கி ஊராட்சி கார்த்திகாபுரம், போன்ற கிராமங்களிலும், 24 மணிநேரமும் போலி மது பாட்டில் 50 இடத்தில் பெட்டி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

 அதே போல், தாலுக்கா லிமிட்டில் சைனகுண்டா, மோர்தானா, தபகொண்ட பள்ளி, சேங்குன்றம், தட்டபாறை, அக்ராவரம், பூங்குளம், (சப்ளை) கூட நகரம், செட்டிக்குப்பம், போன்ற பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்க்கப்படுவதாக கூறுகிறார்கள். செட்டிக்குப்பத்தில் சாராயம் விற்பது பற்றி நடவடிக்கை கோடி கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர். அப்போது மட்டும் நடவடிக்கை எடுத்து, ரிமாண்டு செய்வார்கள், ஆனாலும் சாராய விற்பனையை தடைசெய்வதில்லை.

  சப்டிவிஷன் அதிகாரி உட்பட சில போலிசார் சாராய வியாபாரிகளிடம் நகையும் சதையுமாக உள்ளனர்.

கள்ளச்சாராய கடை மட்டுமின்றி  பேர்னாம்பட்டு பகுதியில் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.

  பங்களாமேடு, கோட்டச்சேரி, கள்ளிச்சேரி, சின்னவரிகம், எருக்கம்பட்டு உள்ளிட்ட பல ஊர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல மாவட்டங்களுக்கு சப்ளையாகிறது.

 கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நேரத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.        கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும், இதனை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இதோடு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் ஆகியோரை பணிநீக்கம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டிஜஜி பகலவன் அவர்களும் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.

 இந்நிலையில் மாநிலம் முழுவதும் சாராய ரைடு முடிக்கிவிடப்பட்டிருக்கிறது.

 அதில் திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி, கணவாய்புதூர் செல்லும் வழியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான  நகர போலிசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

   அப்போது  தர்ஜிபேட்டை சுடுகாடு அருகே சாராயம் விற்று கொண்டிருந்த  இரண்டு  இளைஞர்களை  கைது செய்து அவர்களிடமிருந்து கள்ள சாராய பாக்கெட்டுகள் , 2 கேன்களில்  சாராயம், ஒரு ஆட்டோ, ஒரு இரு சக்கர வாகனம்  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  மேலும் இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.