ஓபிஎஸ் ஊரில் ஜெ நினைவு தினம் அனுஷ்டரிப்பு!

ஓபிஎஸ் ஊரில் ஜெ நினைவு தினம் அனுஷ்டரிப்பு!

எம்.ஏ.கண்ணன்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்  தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8ஆம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 கழக ஒருங்கிணைப்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டம் தேனி நகர செயலாளர் வைகை கருப்பு அவர்களின் ஏற்பாட்டில் தேனி மதுரை சாலையில் பங்களா மேடு பகுதியில்  அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

 இந்நிகழ்வில் கழக இலக்கிய அணி செயலாளர் முருகேசன் முன்னாள் நகர்மன்ற தலைவர் ,

பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் நகரக் கழக பேரூர் கழக பகுதி கழக நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக விசுவாச தொண்டர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.