தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்!

ஆர்.ரமேஷ்,

 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களுக்கான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பிரதி மூன்றாம் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.    

 அதனடிப்படையில் வரும் 21.04.2023 அன்று திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ / ஐடிஐ (தேறியவர் / தவறியவர்), செவிலியர், மருந்தாளுநர், பொறியியல் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 எனவே மேற்கானும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தரை தளம் ' ஊ ' பிளாக்கில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.