குறைந்த செலவில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை! வேலூர் நறுவீ மருத்துவமனை கூட்டத்தில் பேச்சு!

குறைந்த செலவில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை! வேலூர் நறுவீ மருத்துவமனை கூட்டத்தில் பேச்சு!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  வேலூர் நறுவீ மருத்துவமனையில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க கூட்டம் நடைபெற்றது- புதிய நிர்வாகிகளுக்கு மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் பாராட்டு தெரிவித்தார்.!

  வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு நறுவீயின் தலைவர் முனைவர்

ஜி.வி. சம்பத் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

   தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க ஒருங்கிணைந்த "வேலூர் மாவட்ட கிளையின் கலந்தாய்வு கூட்டம்  நறுவீ மருத்துவமனையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை  தந்தவர்களை மருத்துவமனையின் தலைமை இயக்கு அலுவலர் பி.மணிமாறன் வரவேற்றார்.

   இதில் சங்கத்தின் 2021-24 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு புதிய நிர்வாகிகளாக "தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க மாநில தலவர் "க.மனோகரன், மாநில பொதுச் செயலாளர் செல்வன், மாநில பொருளாளர் எஸ்.ஏ.ரமேஷ் வேலூர் மாவட்ட தலைவர் எம்.கண்ணன், துணைத் தலைவர் ஆர்.மோகன், செயலாளர்

டி.நேதாஜி மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

   கூட்டத்திற்கு நறுவீ மருத்துவமனைத் தலைவர் முனவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நினவு பரிசு வழங்கி பாராட்டி "பேசுகையில்,  மருந்து வணிகர்கள் ஆற்றி வரும் பணிகள் பாராட்டத்தக்கது. குறிப்பாக, தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "தேவையான மருந்து மாத்திரைகள விநியோகம் செய்த அவர்களை காப்பாற்றிய பெரும் பங்கு மருந்து வணிகர்களையே "சேரும். 

  "மேலும். நறுவீ மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ வசதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு "நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை வசதி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மருந்து வணிகர்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்த "வேண்டும் என்று "கேட்டுக் கொண்டார். முடிவில் நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நன்றி கூறினார்.