பாலாற்றில் தடுப்பணை கட்டினால்-ரசாயன கலப்பு தடுக்கப்படும்!சன்னியாசி சங்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி!

கு.அசோக்,
பாலாற்ற்றில் கழிவுகள், பிளாஸ்டிக், தோல் கழிவுகளை கலக்க கூடாது, இயற்கையை பாதுகாக்கவும், நீர் வளத்தை பெருக்கவும் 222 கிலோமீட்டருக்கு ரதயாத்திரை நடத்த திட்டம். இதற்காக பாலாறு மக்கள் இயக்கம் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் இணைந்துள்ளன.
வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜெயசங்கர் தலைமையில் பாலாறை பாதுகாக்க ரதயாத்திரை நடத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அதில் பாலாற்றில் தோல் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலாறு புஷ்கரணி விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாலாறு மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தை ராமானந்த மகராஜ்.சிவ பிரத்யங்கரா சுவாமிகள் ,ராஜகோபால் குருஜி பங்கேற்றனர்.
பின்னர் ஸ்ரீ ராமானந்த மகராஜ் சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளுக்கும் விழா எடுத்து நதிகளை பாதுகாக்க வேண்டும்.
நதிகளை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையில் ஆண்டுதோறும் ரதம் நடத்துகிறோம்.
பாலாற்றை பாதுகாக்க, அது துவங்கும் இடமான நந்தி துர்கத்திலிருந்து தண்ணீர் எடுத்து செங்கல்பட்டு மாவட்டம் வரையில் 222 கிலோ மீட்டருக்கு ரதமாக சென்று போகும் வழிகளில் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்அ உள்ளோம்.
ஆறுகளில் தடுப்பனை கட்டி நீரை தேக்கினால் ரசாயண கழிவுகள் நதிகளில் கலக்காது.
இதனை வலியுறுத்தி வரும் 20-1-2022 முதல் ரதயாத்திரை துவங்கி 222 கிலோமீட்டர் வரை செல்ல உள்ளோம் என்று கூறினார்.