எல்லா ஏரிகளையும் தூர்வாரவேண்டும் என ஆசை! அமைச்சர் துரைமுருகன்!

கு.அசோக்,
தமிழில் மருத்துவம் பொறியியல் படிக்க ஊக்கம் அளிக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதற்கு நல்லது தான் செய்வோம் எனவும் - தமிழக ஆளுநர் இரண்டு மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது அளிக்க வேண்டிய கட்டாயத்தால் அளித்தார் வேறு வழியில்லை - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம், காட்பாடியில் திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் திமுக செயலாளர் தயாநிதி தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில், திமுக பொதுசெயலாளரும் தமிழக நீர் வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். இதில் திரளான திமுக வாக்குசாவடி முகவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவம் பொறியியல் படிப்புகளை தமிழில் கொண்டு வரவேண்டுமென கூறியுள்ளது குறித்த கேள்விக்கு அது நல்லது தான் தமிழில் மருத்துவம் பொறியியல் படிக்கும் வகையில் கொண்டு வருவோம்.
தமிழக ஆளுநர் இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கு வரிவிதிப்பு மற்றும் உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவர் இதில் ஒன்று செய்ய முடியாது சர்காருக்கு நாங்கள் வரிபோடுகிறோம் அதனால் தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அமலாக்கத்துறை தமிழகத்தில் சோதனை என்று பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு எல்லோரும் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் என்றார்.
மேலும், மேகதாது அணைகட்டபடும் என சித்தராமைய்யா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அதனை கர்நாடக அரசு கட்ட முடியாது.
மத்திய அரசும் நம்மை மீறி ஒப்புதல் அளிக்க முடியாது, காரணம் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது இதனால் கர்நாடகா சட்டத்திற்கு புறம்பாக போக முடியாது தமிழகத்தில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளில் சில கஷ்டங்கள் இருக்கிறது.
தூர் வாரினால் லாரி லாரியாக மண் வருகிறது அதனை எங்கு கொட்டுவது என தெரியவில்லை எல்லா ஏரிகளையும் தூர் வாரவேண்டும் என்பது எனது எண்ணம் நிதி நிலைக்கு ஏற்ப அதனை செய்வோம்.
நந்தன் கால்வாய் திட்ட பணிகள் விரைவில் சட்டமன்றத்தில் எதிர்பார்க்கலாம் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டபடமாட்டாது சட்டம் நம் பக்கம் இருக்கிறது நியாயமும் நம் பக்கம் இருக்கிறது என சொன்னார்.