திமுகவை வெல்லக்கூடிய கூட்டணி 2026-ல் அமையும்! ஜி.கே.வாசன் நம்பிக்கை!

ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் உள்ள பிரச்சனையை திசை திருப்பவே தற்போது அனைத்து கட்சி கூட்டம், தமிழகத்தில் ஊழலுக்கு அடித்தளம் அமைப்பது டாஸ்மாக் தான், மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களின் கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் - 2026ல் திமுகவை வெல்லக்கூடிய கூட்டணி அமையும் ஆம்பூரில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
அப்போது, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தில், உள்ள 234 தொகுதிகளை 4 மண்டலங்களாக பிரித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற உள்ளது.
எங்களது கூட்டணியை பலப்படுத்த மேலும் தொகுதி மறுசீரமைப்பு மாற்றங்கள் எல்லாம் இந்திய அளவில் ஏற்படுகிற அதிகாரப்பூர்வ நிலை, அது சட்டபடி நடைப்பெறுகிறது இந்நிலையில்,தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ளது அதை திசை திருப்பி, மூடி மறைக்கவே தற்போது அனைத்து கட்சி கூட்டம் திமுக அரசு நடத்துகிறது.
தமிழக உரிமை என ஒரு கண்ணோட்டத்திலும், அரசியல் கண்ணோட்டத்திலும் திமுக அரசு பேசி வருகிறது..பல மொழிகற்க வேண்டும் என்பதை அரசே தடுக்க நினைப்பது, மக்களுக்கு அரசே அநீதி செய்கிறது.
மொழியை திணிப்பதாக கூறி மக்களை குழப்ப வேண்டாம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கேரளா அரசின் உடன்பாடு என்ன என்பதை திமுக அரசு பார்க்க வேண்டும்.
கல்வியில் அரசியல் இருக்ககூடாது, 1965 பாடத்தை, 2025லும் அதே பாடத்தை மாணவர்களுக்கு திமுக எடுக்கிறது.
மேலும் தமிழகத்தில் ஊழலுக்கு அடித்தளமாக செயல்படுவது டாஸ்மாக், வெளிப்படை இல்லாத துறை டாஸ்மாக், மேலும் கனிமவளக்கொள்ளையை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என சொன்னார்.
மேலும் காமராஜர் திறந்து வைத்த ஆம்பூர் சர்க்கரை ஆலையை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும், பாலாறு தென்பெண்ணை ஆற்றை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தமான செய்தி எனவும், மத்திய அரசு, இலங்கை கடற்படையின் அத்துமீறலை, இலங்கை அரசிடம் பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மீனவர்களின் சமூக வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும்,2026 ஆம் ஆண்டில் திமுகவை வெல்லக்கூடிய கூட்டணி அமையும் என பேசினார்.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்