விசாரணைக்கு வில்லன் போல வந்த மன்சூர் அலிகான்!

விசாரணைக்கு வில்லன் போல வந்த மன்சூர் அலிகான்!

ஜி.சாந்தகுமார்,

 த்ரிஷாவை மையப்படுத்தி நான் ஜாலியா பேசியதற்கு அவர் வருந்தியிருந்தால் நானும் வருந்துகிறேன் என்று மன்சூர் அலிகான் தடாலடியாக மன்ன்னிப்பு கோரியிருக்கிறார். இதை போலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் விசாரணைக்கு வில்லன் போல வந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியது.

 கடந்த சில நாட்களுக்கு முன் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

 அவர் அளித்த வாக்குமூலத்தில், 'அந்த வீடியோவில் பேசியது நான்தான், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து நான் பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மனம் வருத்தம் அடைகிறேன்.

 நான் குரல் பிரச்சினைக்காக பின்னர் தான் ஆஜராக இருந்தேன். ஆனால் சமூக வலைதளங்களில் நான் தலைமறைவாகி விட்டேன் என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜராகி உள்ளேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது வேண்டுமானாலும் நான் வர தயாராக இருக்கிறேன். இவ்வாறு மன்சூர் அலிகான் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

 அப்படின்னா கிட்டத்தட்ட இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.