தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது! சொல்கிறார் முன்னாள் அமைச்சர் காமராஜ்!

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது! சொல்கிறார் முன்னாள் அமைச்சர் காமராஜ்!

க.பாலகுரு,

 தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - கர்நாடகா சென்ற முதல்வர் காவிரி நீர் குறித்து எதிர்ப்பை பதிவு செய்யாததை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசம்.

 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் புதிய ரயில் நிலைய முன்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில்,

 பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. கேஸ் சிலிண்டருக்கு மாதம் தோறும் 100 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது போன்ற 520 பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மகளிர் தனியாக சாலையில் செல்ல இயலாத நிலை நிலவி வருகிறது.

 கடைமடை வரை முறையாக நீர் பாயாவதால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. கிளை வாய்க்கால்களுக்கு நீர் பாய்ந்தால்தான் சாகுபடி செய்ய முடியும் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடைபெறுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் தமிழகத்திற்கு தரவேண்டிய 27 டி எம் சி நீரை கொடுத்தால் தான் கலந்து கொள்வேன் என்று எச்சரிக்கை விடாமல், நீர் குறித்து வாய் திறக்காமல் தமிழகம் திரும்பி உள்ளார். அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

 தொடர்ந்து  திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், கோபால், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.