பா.ஜ.க.விடம் சசிகலா உதவி கேட்கிறாரா?

ம.பா.கெஜராஜ்,
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த உடன் பிறவா சகோதரி தன் விசுவாசிகள் தம்மை தேடி வருவார்கள், அதன் பின்னர் கட்சி தன் கட்டுப்பாட்டில் வரும் என நினைத்தார்.
ஆனால், அவரது நினைப்பு பொய்த்து விட்டது. அவரால் பலன் அடைந்தவர்கள் யாரும், அவரை அனுகவில்லை.
இரட்டை இலை கட்சியினர் அனைவரும் இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு, இருந்து விட்டனர்.
இதில் சற்று சருக்க¬ளை நேருங்கிய தோழி, கட்சியினரை கவர, ஒவ்வொருவரிடமும் போனில் பேசினார். அதன் ஆடியோ பதிவுகள் வெளியிட்டார். கட்சியினரை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வரும் நிலையில், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பதற்கேற்ப, தாமரை கட்சி தலைமையை தொடர்பு கொள்ள, பல வழிகளில் முயற்சித்து வருகிறாராம்.