ஈரான் பாகிஸ்தான் மாறி மாறி தாக்குதல் 11 பேர் பலி! குளிர் காய முயலும் சீனா!!

ம.பா.கெஜராஜ்,
ஈரான் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர். அதற்கு பாகிஸ்தான் தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடியில் ஈரானில் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர்.
ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த இஸ்ரேல் ஆதரவு தீவிரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.
24 மணி நேரத்தில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதப்படுகிறது.
ஈரான் எல்லைக்குள் புரட்சிகர ஆயுதப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் சியஸ்டான் - பலுசிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், நிலைமையை சீராக்க நாங்க ஆக்கபூர்வமாக பங்காற்ற தயாராக இருக்கிறது. இரு தரப்பும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.